சந்தானம் 
சினிமா

மீண்டும் ஏ1 கூட்டணியில் சந்தானம்... படத்தின் தலைப்பு அறிவிப்பு

முன்னணி நடிகராக இருக்கும் சந்தானம் மீண்டும் ஏ 1 படத்தின் கூட்டணியில் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்திருக்கிறார்.

தற்போது இவர்கள் கூட்டணியில் புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. காமெடிக்கு பஞ்சமில்லாமல் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு 'பாரிஸ் ஜெயராஜ்' எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. இணையத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இணையவாசிகள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர்.

இந்தப் படத்தில் சந்தானத்துக்கு நாயகிகளாக அனைகா சோடி மற்றும் சஷ்டிகா ராஜேந்திரா நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மொட்டை ராஜேந்திரன் நடித்திருக்கிறார். 'ஏ1' படத்துக்குத் தன் பாடல்களால் மெருகூட்டிய சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்துக்கும் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார். லார்க் ஸ்டியோஸ் நிறுவனம் சார்பாக கே.குமார் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஆர்தர் கே.வில்சன் பணிபுரிந்துள்ளார். ஜனவரி மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.