தற்போது நெடுமுடி வேணுவின் மகன் கண்ணனுக்கும் திருவனந்தபுரம் செம்பழந்தியை சேர்ந்த விரிந்தா நாயர் என்பவருக்கும் திருவனந்தபுரத்தில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் இரு குடும்பத்தாரின் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் என மிக குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே கலந்து கொண்டனர். திருவனந்தபுரம் அருகிலுள்ள துர்கா தேவி கோவிலில், அரசு அறிவித்துள்ள கோவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றியே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.