சோனாக்சி சிங் ராவட் என்ற பாலிவுட் நடிகையும் இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். மீரகி புரடக்ஷன் சார்பில் சபரீஷ் குமார் தயாரிக்கிறார். உணர்ச்சிப்பூர்வமிக்க கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகிறது.
மேலும் பகவதி பெருமாள், நிரஞ்சனி, பிரதாப் போத்தன், பாண்டியராஜன், சுதா சந்திரன், கு.ஞானசம்பந்தம் ஆகியோரும் நடிக்கிறார்கள். பல்லு ஒளிப்பதிவு செய்ய அரோல் கரோலி இசையமைக்கிறார். இயக்குனர் பரத் மோகன் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்ற இக்லூ படத்தை இயக்கியவர்.