'இரண்டாம் குத்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் 'இரண்டாம் குத்து' படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் மற்றும் அந்தப் படத்தின் நடிகர்களைக் கைது செய்ய வேண்டும் எனப் பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நடைபெற்று வந்த நிலையில், படத்தின் டீசரை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.