கௌதம் கார்த்திக் 
சினிமா

கௌதம் கார்த்திக்கின் செல்போனை திருடிய நபர்கள் கைது

தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வரும் கௌதம் கார்த்திக்கிடம் செல்போனை திருடிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாலை மலர்

ராதாகிருஷ்ணன் - டி.டி.கே. சாலை சந்திப்பு வழியாக வீடு திரும்பி கொண்டிருந்த கெளதம் கார்த்திக்கை 2 பேர் வழிமறித்து அவருடைய விலையுயர்ந்த சாம்சங் செல்போனை பறித்துச் சென்றனர். இந்த சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் கெளதம் கார்த்திக்கின் செல்போனை திருடியதாக மயிலாப்பூர் குயில் தோட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனையும், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த சரத் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.