இரண்டு இணையத் தொடர்களில் கிராமத்துக் கதை அமைப்பில் நடிக்கிறார். இது பற்றிக் கூறும்போது, கிராமம் தான் தமிழ்நாட்டின் ஆத்மா என்பது புரிந்தது. அதனால் கிராமத்து லுக்கிற்கு மாற முடிவு செய்து தாடி வளர்த்தேன். முழுக்க என்னைக் கிராமத்தானாக மாற்றிக்கொண்டு, இரண்டு இணையத்தொடர்களில் நடிக்கிறேன்.
இந்தத் தொடர்கள் பிற இயக்குநர்களை என்னை வித்தியாசமான கதாபாத்திரங்களில் யோசித்துப் பார்க்க பேருதவியாக இருக்கும். பொதுவாகவே நடிகர்கள் தன்னை புதிது புதிதாக மாற்றிக்கொள்வது மிக முக்கியம். ஒரு கலைஞனுக்கு இந்த மாற்றம் அவசியம் என்றார்.