தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் விவேக். இவருக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவரது மறைவிற்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் படத்தொகுப்பாளர் ரூபன், விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “ விவேக்கின் திடீர் மறைவை ஜீரணிக்க முடியவில்லை. சமீபத்தில் அவரை சந்தித்து, அவர் இயக்குனராக அறிமுகமாகும் படம் குறித்து ஆலோசித்தேன், தற்போது கடவுள் அவரின் கால்ஷீட்டை எடுத்துக்கொண்டுள்ளார். மிகவும் கனிவான, தாழ்மையான ஆத்மா நம்மை விட்டு விலகிவிட்டது” என பதிவிட்டுள்ளார்.