இவர்களில் அதிக வாக்குகள் பெற்ற ஆரி டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஆரிக்கு டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ரூ.50 லட்சத்துக்கான காசோலையையும் கமல்ஹாசன் வழங்கினார். ஆரிக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இயக்குனரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் ஆன சேரன், ஆரிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அதுபோல், "BBல் runner ஆக வெற்றிபெற்று இரண்டாம் இடத்தை பெற்ற பாலாஜியின் உண்மை முகமும் எதையும் சுலபமாக கடந்துசென்று தன்னை மாற்றிக்கொள்ளும் குணமும் கவர்ந்தது.. கண்டிப்பாக பக்குவப்படப்பட வாழ்க்கையில் உயர்வார்.. வாழ்த்துக்கள் பாலாஜி" என குறிப்பிட்டு உள்ளார்.