இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் இயக்குனர் பொறுப்பிலிருந்து கார்த்திக் நரேன் விலகிவிட்டார் என்று செய்திகள் வெளியானது. மேலும், தனுஷே தற்போது இயக்கி வருவதாகவும், அவருக்கு உறுதுணையாக சுப்பிரமணிய சிவா இருப்பதாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக விசாரித்தபோது, "தனுஷ் - கார்த்திக் நரேன் இருவருக்குமே எந்தவொரு பிரச்சனையும் இல்லை. கார்த்திக் நரேன்தான் இயக்குனராகப் பணிபுரிந்து வருகிறார்" என்று தெரிவித்தார்கள்.