சினிமா

தலைவா நீ வாழ்த்தியது கடவுளே வாழ்த்தியதுபோல இருக்கிறது: ராஜமௌலி பெருமிதம்

ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்தது கடவுளே வாழ்த்தியதுபோல் இருப்பதாக ராஜமௌலி பெருமிதமாக கூறியுள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே பார்ப்போம்.

மாலை மலர்

‘பாகுபலி-2’ படத்தை பார்த்த பல்வேறு பிரபலங்களும் படக்குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் ரஜினியும் இந்த படத்தை பார்த்துவிட்டு, படக்குழுவினரையும் இயக்குனர் ராஜமௌலியையும் பாராட்டியிருந்தார். ‘பாகுபலி-2’ படம் இந்தியாவின் பெருமை. கடவுளின் குழந்தையான ராஜமௌலிவுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்திருந்தார்.