பிரியங்கா சோப்ராவை உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா நாட்டுக்கு நல்எண்ண தூதுவராக ஐ.நா சபை நியமித்துள்ளது. அங்கு பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பணியில் பிரியங்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இது பற்றி கூறியுள்ள சோனாக்ஷிசின்கா, “சம்பாதித்தோமா, தலைமுறைக்கு சொத்து சேர்த்தோமா என்று சுயநலமாக செயல்படுவோர் மத்தியில், பிரியங்கா பொது நலத்துடன் செயல்படுகிறார். அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.