இதற்காகவே எனக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. முதலில் அதைப்பார்த்ததும் எனக்கு சிரிப்பு வந்தது. அந்த கடிதத்தை தெளிவாக படித்தால் இந்த விவகாரத்தில் எனக்கு தொடர்பு இல்லையென்பது நன்றாக தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் திலீப்பின் உறவினரும், டைரக்டருமான நாதிர்ஷா கூறியதாவது:- திலீப்பிடமிருந்து பணம் பறிக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அவர்கள்தான் விஷ்ணுமூலம் என்னையும், திலீப்பின் மானேஜர் அப்புண்ணியையும் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அவர்களின் பேச்சை நாங்கள் பதிவு செய்துள்ளோம். ரூ.1½ கோடி பணம் கேட்ட தகவலை போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்.