விஜய் நடித்துள்ள மெர்சல், சசிகுமாரின் கொடி வீரன், பரத் நடித்துள்ள பொட்டு ஆகிய 3 படங்களும் தீபாவளி பண்டிகையையொட்டி வருகிற 18-ந்தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களை விட தீபாவளிக்கு அதிக காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்குவது உண்டு. ஒருவாரம் அதிகமான வசூலும் இருக்கும்.
இதனால் 3 படங்களின் தயாரிப்பாளர்களும் தீபாவளிக்கு படங்களை திரையிடுவதில் தீவிரமாக இருக்கிறார்கள். மெர்சல் படம் ரூ.140 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் 3300 தியேட்டர்களில் மெர்சல் திரையிடப்படும் என்றும் தமிழகத்தில் 500 தியேட்டர்களிலும் கேரளாவில் 325 தியேட்டர்களிலும் இந்த படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.