சினிமா

தந்தையை கிண்டல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்த சிம்பு

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட டி.ராஜேந்தரை கிண்டல் செய்பவர்களுக்கு சிம்பு பதிலடி கொடுத்துள்ளார். #STR #TR

மாலை மலர்

சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவர் நடிகர் சிம்பு. அதுபோல் அவரது தந்தையான டி.ராஜேந்தரும் பல மீம்ஸ்களுக்கு பெயர் பெற்றவர். இவரது பேட்டி வந்த பிறகு இவர் பேசிய வசனங்களை வைத்து கலாய்த்து பதிவு செய்து வருகிறார்கள். மேலும் வாயில் இசை வாசிப்பது, தலைமுடி ஆட்டுவது போன்ற விஷயங்களால் அவர் நிறைய கலாய்க்கப்பட்டுள்ளார்.

இந்த நேரத்தில் பிரபல தொலைக்காட்சியில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துக் கொண்டுள்ளார். அப்போது அந்த நிகழ்ச்சியில் வீடியோ மூலம் பேசிய சிம்பு, என் அப்பா மிகவும் சிறந்தவர். அவரிடம் நிறைய திறமைகள் உள்ளது. ஆனால், நிறைய பேர் அவரை வைத்து மீம்ஸ் உருவாக்கி கலாய்க்கிறார்கள்.

வாயில் இசை வாசிக்கிறார் என்று கலாய்க்கிறார்கள். உங்களால் அது முடியுமா, தலைமுடி ஆட்டுகிறார் என்கிறார்கள் இந்த வயசிலும் அவர் ஆட்டுகிறார் உனக்கு இந்த 20 வயசிலேயே முடி இல்லை.

எந்த பெண்ணை பார்த்தாலும் உனக்கு ஏதாவது தோன்றும். ஆனால் ஒரே ஒரு பெண் தான் என்று வாழ்கிறார் என் அப்பா. நீ இப்போதே நிறைய போதைகளுக்கு அடிமையாகியிருப்பாய். ஆனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் கூட கிடையாது.

கிண்டல் செய்பவர்கள் எல்லாம் யார் என்று பார்த்தால் திறமை இல்லாதவன் தான் செய்கிறான். ஆனால் என் அப்பாவின் திறமையை அங்கீகரித்து மதித்தவர்களை நான் மதிக்கிறேன் வணங்குகிறேன் என்று மனம் உருக பேசியுள்ளார். இதை கேட்ட டி.ராஜேந்தர் கண் கலங்கினார்.