சினிமா

தரையில் கால் படாமல் ஆட்டம் ஆடிய சிம்பு

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்துக்காக தரையில் கால் படாமலேயே சிம்பு ஆட்டம் ஒன்றை ஆடியிருக்கிறார்

மாலை மலர்

யுவன் இசையமைக்கும் இப்படத்தில் வைரமுத்து வரிகளில் ‘இரத்தமே ரத்தம்’ என்ற பெயரில் ஒரு பாடல் உருவாகியுள்ளது. இந்த பாடலை சிம்புவே பாடியுள்ளார். முழுக்க முழுக்க ரசிகர்களை மையப்படுத்தியே உருவாகியிருக்கும் இப்படத்தின் பாடலை சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.

இந்த பாடலில் சிம்புவின் கால் தரையில் படாத அளவுக்கு அவரது ரசிகர்கள் அனைவரும் தங்கள் தோளிலேயே நிற்க வைத்து அவர் ஆடுவது போல் படமாக்கியுள்ளனர். இந்த பாடலுக்கு ராபர்ட் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். அவர்தான் இந்த தகவலை டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார்.