ஷ்ரத்தா ஸ்ரீநாத் 
சினிமா

பெண்ணியவாதியாக மாற்றிய சம்பவம் குறித்து ஷ்ரத்தா ஸ்ரீநாத்

தமிழில் தற்போது பிரபலமாகி வரும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் பெண்ணியவாதியாக மாற்றிய சம்பவம் குறித்து பேசியிருக்கிறார்.

ஷ்ரத்தா தனது பதிவில், ‘எனக்கு 14 வயது இருக்கும்போது குடும்பத்தினருடன் ஒரு பூஜையில் கலந்து கொண்டேன். அப்போது எதிர்பாராமல் எனக்கு மாதவிடாய் வந்துவிட்டது. அம்மா அங்கு என்னுடன் வரவில்லை. அதனால் அருகில் இருக்கும் என் உறவினரிடம் அது குறித்து கூறினேன்.

எனது கையில் சானிட்டரி பேட் எதுவும் இல்லை என்பதால் மிகுந்த வருத்தத்துடன் அமர்ந்திருந்தேன். என் பக்கத்தில் இருந்த வேறொரு பெண் நான் பேசியதை ஒட்டுக் கேட்டுவிட்டு நான் வருத்தமாக இருப்பதைப் பார்த்து, “பரவாயில்லை குழந்தை, கடவுள் உன்னை மன்னித்து விடுவார்” என்று கூறினார்.

SCROLL FOR NEXT