இந்த படத்தின் இரண்டு பாகத்திலும் கட்டப்பாவாக நடித்த சத்யராஜ் மிகவும் பேசப்பட்டார். அவருடைய பாத்திரம்தான் 2-ம் பாகத்தின் முக்கிய அம்சமாக அமைந்தது. `பாகுபலி' கதையில் உயிரோட்டமே அவர்தான் என்று சொல்லும் அளவு சிறப்பான நடிப்பால் சத்யராஜ் அனைவரையும் கவர்ந்தார்.
கதையின் முக்கிய பாத்திரம் சத்யராஜ் என்பதால், அவரை வைத்து கர்நாடகாவில் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். அது ‘பாகுபலி-2’க்கு அதிக விளம்பரத்தை கொடுத்தது. இந்த படத்தின் பிரமாண்டம். மற்ற நடிகர் - நடிகைகள் பற்றி பலரும் பாராட்டி இருக்கிறார்கள்.