கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகள், உடைமைகளை இழந்து தவிக்கின்றனர்.
இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் கேரள வெள்ள பாதிப்புக்கு ரூ.15 லட்சம் நிவாரணத் தொகை அளித்துள்ளார்.
முன்னதாக நடிகர்கள் கமல், விஜய் சேதுபதி, சூர்யா - கார்த்தி இணைந்து ரூ.25 லட்சம் வழங்கியுள்ளனர். நடிகர் தனுஷ் ரூ.15 லட்சமும், விஷால், சித்தார்த், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின் மற்றும் இயக்குநர் ஷங்கர் தலா ரூ.10 லட்சமும், நடிகை ரோஹிணி ரூ.2 லட்சமும் அளித்துள்ளனர். #KeralaRain #KeralaFlood #KeralaFloodRelief #Rajinikanth