பல்சர் சுனில் கைதாகி 2 மாதங்களுக்கு மேல் ஆவதால் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என பல்சர் சுனில் கேரள ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் பல்சர் சுனிலுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஐகோர்ட்டு பல்சர் சுனிலின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
இதுதொடர்பாக கோர்ட்டு அளித்த உத்தரவில் பல்சர் சுனிலுக்கு குற்றப்பின்னணி இருப்பதாக கோர்ட்டு கருதுகிறது. இவருக்கு எதிராக பல ஆதாரங்களும் உள்ளன. ஓடும் காரில் நடிகையை பலாத்காரம் செய்ததில் இவருக்கு முக்கிய பங்கு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ள நிலையில் இவருக்கு ஜாமீன் வழங்க இயலாது என கோர்ட்டு தெரிவித்ததுள்ளது.