சினிமா

பிரதமர் மோடி முன்பு கால்மேல் கால்போட்டு அமர்ந்து சர்ச்சையில் சிக்கிக்கொண்ட பிரியங்கா சோப்ரா

பிரதமர் மோடியை சந்தித்தபோது கால்மேல் கால் போட்டு அமர்ந்து பேசியதால் பிரியங்கா சோப்ராவுக்கு கண்டனங்கள் எழுந்துள்ளது.

மாலை மலர்

இந்த பதிவை பார்த்த பலரும் பிரியங்கா சோப்ராவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவிக்க ஆரம்பித்தனர். ஒரு நாட்டின் பிரதமர் முன்னிலையில் கால் மேல் கால் போட்டு மரியாதை இல்லாமல் இப்படி அமர்ந்திருப்பதா? அதேபோல், பிரதமரை சந்திக்கும்போது நம்முடைய கலாச்சாரப்படி உடை அணிய வேண்டாமா? என நிறைய பேர் பிரியங்காவை வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

அதேநேரத்தில், நாற்பது நாட்களாக டெல்லியில் போராடிய விவசாயிகளை சந்திக்க மறுத்ததும், நாடு முழுக்க மாட்டிறைச்சி தடை விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதைப்பற்றியெல்லாம் கருத்து கூறாமல் நடிகையை சந்திக்க மட்டும் எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்று மோடி மீது பலரும் கொந்தளிப்போது தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.