சினிமா

`ப.பாண்டி'யை தொடர்ந்து அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிரசன்னா

`ப.பாண்டி' படத்தை தொடர்ந்து பிரசன்னா தனது அடுத்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார். அது என்ன படம் என்பதை கீழே பார்ப்போம்.

மாலை மலர்

இந்நிலையில் பிரசன்னா தற்போது, மிஷ்கின் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்து `துப்பறிவாளன்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் `திருட்டு பயலே 2', `நிபுணன்', `இதானோ வலிய காரணம்' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.

இதையடுத்து, தனது அடுத்த படத்தில் பிரசன்னா போலீஸ் அதிகாரியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். பிரபல எழுத்தாளரான குட்டி ரேவதி மற்றும் பத்திரிக்கையாளர் புதிய பருதி இணைந்து எழுதியுள்ள கதையை குட்டி ரேவதியே இயக்கவிருக்கிறார். இப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பிரசன்னா நடிக்க இருக்கிறார். இதில் ஐ.பி.எஸ். கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பிரசன்னா சிறப்பு பயிற்சியும் எடுத்து வருகிறாராம்.  

இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்டில் தொடங்க இருப்பதாகவும், மற்ற கதாபாத்திரங்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும், இப்படம் குறித்த மற்ற தகவல்கள் அடுத்தடுத்து வெளியிடப்படும் என்றும் குட்டி ரேவதி தெரிவித்துள்ளார்.