சினிமா

எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராக போலீசில் புகார்

`பாகுபலி-2' படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.

இதில், ரிலீசாவதற்கு முன்பே கர்நாடகத்தில் சத்யராஜ்-க்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம், விநியோகஸ்தர்கள் கருத்து வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகளை படக்குழு சந்தித்தது. இந்நிலையில் படம் வெளியான பின்னரும் மேலும் ஒரு சிக்கல் படக்குழுவுக்கு வந்துள்ளது.

படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனத்தில், குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பினரை புண்படுத்தியிருப்பதாக படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தின் "அரேகட்டிக்க பொரட்ட சமிதி" அமைப்பின் தலைவர்களுள் ஒருவர், நாங்கள் கொடூரமானவர்கள் அல்ல, `பாகுபலி-2' படத்தில் எங்களை மனிதாபிமானமற்ற மற்றும் சமூக விரோத மக்களாக காட்டியிறுப்பதாக கூறி, குறிப்பிட்ட அந்த காட்சியில் வரும் "கட்டிக்கா" என்ற வசனத்தை நீக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.