சினிமா

பாக்கணும் போல இருக்கு

எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பரதன் - அன்சிபா ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் `பாக்கணும் போல இருக்கு' படத்தின் விமர்சனம்.

மாலை மலர்

இந்நிலையில், அந்த ஊருக்கு வரும் நாயகி அன்சிபா ஹாசனையும் பார்க்கிறார். முதலில் அன்சிபா யார் என்று தெரியாமல் அவளை காதலிக்க ஆரம்பிக்கும் பரதன், பின்னர் அன்சிபா தனது சிறு வயது தோழி என்பதை அறிந்து கொள்கிறார். பின்னர் தனது தோழி தான் அன்சிபா என்பதால் அன்சிபாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பிக்கிறார். அத்துடன் பரதன் தனது காதலையும் தெரிவிக்கிறார்.

பரதனின் காதலை அன்சிபாவும் ஏற்றுக் கொள்கிறாள். இதையடுத்து அடிக்கடி சந்திக்கும் இவர்கள், ஒருநாள் படம் பார்க்க தியேட்டருக்கு செல்கின்றனர். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது, டிவி சேனல் ஒன்று எடுத்த பேட்டியில் பரதனும், அன்சிபாவும் ஒன்றாக வெளியே வருவது தெரிந்துவிடுகிறது. இதனை ஊர்மக்கள் பலரும் பார்த்து விடுகின்றனர்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகும் அன்சிபாவின் அப்பாவான லிவிங்ஸ்டன், தனது மகளை கண்டிக்கிறார். இந்நிலையில், அன்சிபாவின் வீட்டிற்கு வரும் பரதனின் தந்தை ஜெயப்பிரகாஷ், இருவரது காதலும் ஊர் அறிந்த விஷம் என்பதால், இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என்று பெண் கேட்கிறார். லிவிங்ஸ்டனும் அதற்கு சம்மதம் தெரிவிப்பதால், இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்படுகிறது.

நிச்சயதார்த்தத்துக்காக வெளியூரில் இருந்து வரும் பரதனின் அண்ணன், அன்சிபாவின் அக்காவிடம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கேட்கிறார். இந்த காட்சி மண்டபத்தில் இருக்கும் தொலைக்காட்சிகளில் தெரிகிறது. இதனை மண்டபத்தில் இருக்கும் அனைவரும் பார்த்து விடுகின்றனர். இதனால் மேலும் மனவேதனைக்கு உள்ளாகும் லிவிங்ஸ்டன் பரதன் - அன்சிபா திருமணத்திற்கு முன்னதாக அவர்களது அண்ணன் - அக்காவின் திருமணத்தை நடத்தி விட முடிவு செய்கின்றனர்.

இதையடுத்து உடனடியாக நிச்சயம் செய்து, பின்னர் திருமணமும் செய்து வைக்கின்றனர். இந்நிலையில், ஜெயப்பிரகாஷ் வீட்டில் நடக்கும் ஒரு பிரச்சனையை அன்சிபாவின் அக்கா தவறாக சித்தரித்து தனது அப்பா வீட்டிற்கு வந்து விடுகிறாள். இதானல் பரதன் லிவிங்ஸ்டனை அடிக்கும் அளவுக்கு பிரச்சனை செல்கிறது. தனது அப்பாவை அடித்ததால், பரதனிடம் அன்சிபா சண்டை பிடிக்கிறாள்.

இவர்களது காதலிலும் பிரச்சனை வர, இருவரும் மீண்டும் இணைந்தார்களா? அவர்களது காதல் திருமணத்தில் முடிந்ததா? அண்ணனும் - அண்ணியும் மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

பரதன் இயல்பான நடிப்பின் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரியுடன் இணைந்து பரதன் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி இருக்கிறது. பல இடங்களில் இருவரும் சிரிப்பு மழையில் நனைய வைக்கின்றனர். காதல் காட்சிகளில் அன்சிபாவின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.

சூரி வழக்கம்போல அவரது இயல்பான காமெடி மூலம் திரையரங்கையே அதிர வைக்கிறார். சூரியுடன் இணைந்து பிளாக் பாண்டி காமெடியில் முயற்சி செய்திருக்கிறார். குறிப்பாக கஞ்சா கருப்புவை கலாய்க்கும் காட்சிகள் உச்ச காமெடியாக அமைவது, களவாணி படத்தை நினைவுபடுத்தும் படி இருக்கிறது. லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் என மற்ற கதாபாத்திரங்கள் அனைவரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை இயக்கியிருக்கும், இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் முயற்சிக்கு பாராட்டுக்கள். பரதன் - சூரி இடையேயான ஒற்றுமை நன்றாக இருப்பதால் படம் ரசித்து பார்க்கும் படி இருக்கிறது. நட்பு, காதல், பாசம் என அனைத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம்.

அருள் தேவ் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையில் ரசிக்க வைத்திருக்கிறார். டி.எம்.மூவேந்தரின் ஒளிப்பதிவில் காட்சிகள் கிராமத்துசாயலில் நன்றாக வந்திருக்கிறது.