சினிமா

பிரதமர் முன்பு கால்மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது: சன்னிலியோன்

பிரதமர் முன்பு கால் மேல் கால்போட்டு உட்கார்ந்த பிரியங்காவை குறை சொல்லக்கூடாது என்று கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கருத்து தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

இது பெரும் விமர்சனத்துக் குள்ளானது. பிரியங்கா சோப்ராவின் இந்த செயலுக்கு ஏராளமானோர் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதத்தில், அதில் தவறு இல்லை. என்பது போன்று பிரியங்கா சோப்ராவும், அவருடைய அம்மாவும் கால் தெரியும் படி உடை அணிந்திருந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது ஆதங்கத்தை தீர்த்துக்கொண்டார்.

இந்த நிலையில் பிரியங்கா சோப்ராவுக்கு சன்னிலியோன் ஆதரவு தெரிவித்துள்ளார். இது பற்றி கூறியுள்ள அவர், “ நாம் மிகவும் ஸ்மார்ட் ஆன மனிதரைதான் இந்திய பிரதமராக தேர்வு செய்து இருக்கிறோம். அவர் மனதில் பட்டதை பேசக்கூடியவர். பிரியங்கா உடை அணிந்து சென்றதில் பிரச்சினை இருந்திருந்தால் பிரதமர் நிச்சயம் கூறி இருப்பார். ஆனால் அவர் எதுவும் சொல்லவில்லை.