சினிமா

தமிழில் கிடைத்த வரவேற்பால் சென்னையில் குடியேறிய நிக்கி கல்ராணி

தமிழில் கிடைத்து வரும் தொடர் வாய்ப்பின் காரணமாக நடிகை நிக்கி கல்ராணி சென்னையில் வீடுவாங்கி குடியேறி இருக்கிறார்.

‘டார்லிங்’ படம் மூலம் தமிழுக்கு வந்தவர் நிக்கி கல்ராணி. தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இப்போது ஆதியுடன் ஜோடி சேர்ந்த ‘மரகதநாணயம்’ ரசிகர்களின் ஆதரவுடன் ஓடிக் கொண்டு இருக்கிறது. தொடர்ந்து ‘நெருப்புடா’, ‘கீ’, ‘ஹரஹரமகா தேவகி’, ‘பக்கா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

வேறு சில தமிழ் படங்களுக்கும் கதை கேட்டு வரு கிறார். தொடர்ந்து தமிழ் படங்கள் வருகின்றன. நல்ல கதைகளும் அமைகின்றன. இனி வெற்றிகள் தொடரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. எனவே, சென்னையில் புதிய வீடு வாங்கி குடியேறிவிட்டார்.

SCROLL FOR NEXT