சினிமா

பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்த நயன்தாரா

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை நயன்தாரா பிரம்மாண்ட படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்திருக்கிறார்.

இது போல், ‘பாகுபலி’ கதையை எழுதியதும் தேவசேனா பாத்திரத்துக்கு முதலில் நயன்தாராவை நடிக்க வைக்கத்தான் ராஜமவுலி விரும்பியுள்ளார். ஆனால் அந்த நேரத்தில் நயன்தாரா பல படங்களில் நடித்துக்கொண்டு இருந்ததால் ராஜமவுலி கேட்ட தேதிகளில் நயன்தாரா கால்ஷீட் கொடுக்கமுடியவில்லை. இதனால் அனுஷ்கா ஒப்பந்தம் செய்யப்பட்டார். பாகுபலி முதல் பாகத்தில் அனுஷ்காவுக்கும் தமன்னாவுக்கும் சமமான அளவு முக்கியத்துவம் கொடுத்து இருந்தார்.