மூடர் கூடம் நவீன் 
சினிமா

இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது - மூடர் கூடம் நவீன்

இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது என்று மூடர் கூடம் திரைப்படத்தின் இயக்குனர் நவீன் கூறியுள்ளார்.

மாலை மலர்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பாதித்து வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மால்கள், திரையரங்குகள், பொது இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள் பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், மூடர் கூடம் படத்தின் இயக்குனர் நவீன், ‘இருக்கிறவன் இல்லாதவனுக்கு கொடுக்க வேண்டிய நேரம் இது’ என்று பதிவு செய்திருக்கிறார். மேலும் ‘காரில் சென்றேன். அப்போது டிரைவர் 48 மணி நேரத்தில் எனக்கு கிடைத்த முதல் சவாரி நீங்கள்தான் என்று கூறினார். தினமும் பணத்தை நம்பி வாழும் மக்கள் கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், அவருக்கு பயண பணத்தை விட அதிகமாக 500 ரூபாய் அதிகமாக கொடுத்தேன். தயவு செய்து இல்லாதவனுக்கு கொடுத்து உதவுங்கள்’ என்றார்.