நட்சத்திர தம்பதிகளான இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு மும்பை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாந்திரா குடும்பநல கோர்ட்டில் இவர்களது மனு மீண்டும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.