மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான படம் ‘தனி ஒருவன்’. இதில் ஜெயம் ரவியுடன் நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு சூப்பர் ஹிட்டானது.
மேலும் ரீமேக் மூவிதான் மோகன் ராஜா இயக்குவார் என்று பெயரை தகர்த்து, சொந்த கதையையும் சிறப்பாக இயக்குவார் என்ற பெயரையும் அவருக்கு பெற்றுத் தந்தது. இப்படம் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி வெளியானது. மூன்று ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், முக்கிய அறிவிப்பை மோகன் ராஜா வெளியிட்டிருக்கிறார்.
அதாவது, மீண்டும் ஜெயம் ரவியை வைத்து ‘தனி ஒருவன் 2’ படத்தை இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் பதிவு செய்திருக்கிறார்.
இப்படத்தின் கதாநாயகி, மற்ற கதாபாத்திரங்கள் யார் என்ற தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi #MohanRaja