சினிமா

மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை

மராத்தி பட தயாரிப்பாளர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். முன்னதாக அவர் ‘பேஸ்புக்’கில் தனது தற்கொலைக்கான காரணம் குறித்து உருக்கமாக பதிவு செய்து உள்ளார்.

மாலை மலர்

ஆனால் அவர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அங்கு விரைந்து வந்த போலீசார் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்தார். அவரது உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்திய சோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அவர் தனது விபரீத முடிவுக்கான காரணம் குறித்த கடிதத்தை “பேஸ்புக்” பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதாவது, அதுல் தப்கிர் தயாரித்த “டோல் தசா” படம் சரியாக ஓடாததால் அவர் பெரும் நஷ்டத்திற்கும், கடன் சுமைக்கும் ஆளானார். இது அவரது குடும்ப வாழ்க்கையிலும் எதிரொலித்தது. அதுல் தப்கிருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு உருவானது. இந்த நிலையில் குடும்ப தகராறு தொடர்பாக அதுல் தப்கிர் மீதும், அவரது தந்தை மீதும் மனைவி போலீசில் புகார் கொடுத்தார். இதில் நடவடிக்கை எடுக்காமல் இருக்க போலீசார் அதுல் தப்கிரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தை பறித்துள்ளனர். இவ்வாறு நெருக்கடிக்கு ஆளானதால் தான் தற்கொலை செய்துகொள்வதாக அந்த பதிவில் அதுல் தப்கிர் உருக்கமாக கூறியுள்ளார்.