மலைக்கா அரோரா 
சினிமா

கொரோனாவில் இருந்து மீண்ட மணிரத்னம் பட நடிகை

கொரோனாவில் இருந்து மீண்டதை ஆசிர்வாதமாக கருதுகிறேன் என்று மணிரத்னம் பட நடிகை மகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

மாலை மலர்

இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இறுதியில் பல நாட்களுக்கு பிறகு எனது அறையைவிட்டு நான் வெளியே வந்து உள்ளேன். இது சுற்றுலா வந்தது போல உணர்வை தருகிறது. 

குறைந்த வலி, அசவுகரியத்துடன் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வந்ததை ஆசிர்வாதமாக கருதுகிறேன். மருத்துவ ஆலோசனைகள் வழங்கிய டாக்டர்கள் மற்றும் மும்பை மாநகராட்சி, குடும்பத்தினர், நண்பர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், ரசிகர்களுக்கு மிகப்பெரிய நன்றி.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.