சினிமா

அரவிந்த்சாமியை தேடும் மதுரை, தூத்துக்குடி பெண்கள்

செல்வா இயக்கத்தில் `வணங்காமுடி' படத்தில் நடித்து வரும் அரவிந்த்சாமியை மதுரை மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த இரு பெண்கள் தேடி வருகிறார்களாம்.

செல்வா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. அரவிந்த்சாமி நாயகனாக நடிக்கும் இதில் ரித்திகா சிங், சிம்ரன், நந்திதா ஸ்வேதா, சாந்தினி தமிழரசன், கணேஷ் வெங்கட்ராம், தம்பி ராமைய்யா, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். இவர்களில் அரவிந்த்சாமி மனைவியாக ரித்திகாசிங் நடிக்கிறார். இவரது தோழியாக சிம்ரன் நடிக்கிறார்.

நந்திதா, சாந்தினி ஆகியோர் மதுரை, தூத்துக்குடி பெண்களாக நடிக்கிறார்கள். இவர்கள் அரவிந்த்சாமியை ஏன் தேடிச் செல்கிறார்கள் என்பதுதான் கதையின் ‘சஸ்பென்ஸ்’ என்று சொல்லப்படுகிறது.

SCROLL FOR NEXT