மதுமிதா 
சினிமா

கொரோனா ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிய மதுமிதா

பிரபல நடிகை மதுமிதா கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாத்தால் இரண்டு விஷயங்களை கற்றுக் கொண்டுள்ளார்.

மாலை மலர்

கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மதுமிதா, சில காரணங்களால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

கொரோனா ஊரடங்கில் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டிலிருக்கும் மதுமிதா, பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

 இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “படப்பிடிப்பு இல்லாத, குறைந்த நாட்களில் பைக் ஓட்டவும் கார் ஓட்டவும் கற்றுக் கொண்டுவிட்டேன். எப்போதும் யாரையாவது சார்ந்து நிற்பது பெண்களின் கெட்ட பழக்கம்! நம்மால் இயலும் என்ற நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்டேன். மற்றொரு ஓட்டுநர் இல்லாமல் பயணிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.