ஒளிப்பதிவு - பி.கே.வர்மா, இசை - நிவாஸ் கே.பிரசன்னா, பாடல்கள் - கபிலன், எடிட்டிங் - லியோ ஜான்பால், கதை - கே.கதிர், ஸ்டண்ட் - அன்பறிவ், நடனம் - ஷெரீப், சதீஷ், தயாரிப்பு - எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு, ரமானியம் டாக்கீஸ், கதை, திரைக்கதை, இயக்கம்- டி.ஜே.ஞானவேல்.
படம் பற்றி கூறிய தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. “இந்த படம் இது வரை யாரும் பேசாத மிடில் பெஞ்ச்சர்ஸ் வர்க்கத்தைப் பற்றி பேசும் படம். அனைவரும் ரசிக்கும் படம்” என்றார்.
நாயகன் அசோக் செல்வன், “நானும் ஒரு மிடில் பெஞ்சர்தான் இப்போது நிலவி வரும் குழப்பமான சூழ்நிலையில் இது ஒரு பாசிட்டிவான படமாக இருக்கும். எல்லோருடைய மனதிலும் நல்லெண்ணத்தை விதைக்கும் படம் இது” என்று தெரிவித்தார்.
நாயகி பிரியா ஆனந்த், “படங்களில் இனி நடிக்ககூடாது என்ற எனது மனநிலையை மாற்றி, நடிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை இந்த கதை தூண்டியது” என்று கூறினார்.