இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷை கிராபிக்ஸ் முறையில் சாவித்ரியின் உடம்பு அளவுக்கு குண்டாக்கவிருக்கிறார்களாம். ஆரம்பத்தில் இப்படத்தில் நடிப்பதற்காக கீர்த்தி சுரேஷை உடல் எடையை கூட்டும்படி இயக்குனர் நாக் அஸ்வின் கூறியிருந்தாராம்.
ஆனால், படப்பிடிப்பு நெருங்கும் சமயத்திலும் அவரது உடல் எடை கூடவே இல்லையாம். இனிமேல், வேறு நடிகையை தேடிச் செல்லமுடியாது என்று நினைத்த படக்குழு, வேறு வழியில்லை என்பதுபோல் கீர்த்தி சுரேஷை வைத்தே படப்பிடிப்பை தொடங்கிவிட்டார்களாம்.
தற்போது கீர்த்தி சுரேஷ் இரட்டை ஜடை போட்டு படப்பிடிப்பில் அமர்ந்து இருப்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் சாவித்ரி சாயல் இருந்தாலும் அவரைப்போல் குண்டாக இல்லை என்றொரு கருத்து சமூக வலைத்தளத்தில் பரவியது.