இந்த படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கும் சிவானி செந்தில் கூறுகிறார்....
சென்னை - பெங்களூர் காரில் செல்லும் ராஜாவுக்கு காதலியுடன் சின்ன விரிசல். அது கார்கில் போராக மாற, ராஜா போராடி முடிவில் வெல்லும் காதல் கதை.
தமிழ் திரை வரலாற்றில் முதல்முறையாக இதில் ஒற்றை நடிகன் மட்டும் திரையில் தோன்றுவது புது முயற்சி.
புதிய படைப்புகளுக்கு மக்களின் ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் தரமான படைப்புடன் களம் இறங்கியுள்ளேன். கதை நாயகனாக ஜிஷ்னு எனும் அறிமுக நாயகன் தோன்றுகிறார். அவரது அர்ப்பணிப்பு நிச்சயம் நிலையான இடத்தை அவருக்கு பெற்று தரும். மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் புதிய அறிமுகங்களே.
ஒளிப்பதிவு - கணேஷ் பரமஹம்ஸா, இசை - விக்னேஷ் பாய், எடிட் டிங் - அபிநாத், தயாரிப்பு - சுபா செந்தில்.
இந்த படத்தின் 2 பாடல்களும், மொத்த படப்பிடிப்பும் மிக குறைந்த நாட்களில் முடிவடைந்தது.