சினிமா

நீச்சல் உடையில் நடிகை கரீனாகபூர் - ரசிகர்கள் ஆதங்கம்

நீச்சல் உடையில் இருக்கும் நடிகை கரீனாகபூரின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. குழந்தை பெற்றதால் புகைப்படத்தில் அவரது முகம் பொலிவிழந்து விட்டதாக ரசிகர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

மாலை மலர்

பிரபல இந்தி நடிகை கரினா கபூர், நடிகர் சயீப் அலிகானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து கர்ப்பம் அடைந்த கரீனா கபூருக்கு கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பரில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தை பெற்ற பிறகு கரீனா கபூரின் உடல் குண்டானது. எனவே உடல் பயற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு மூலம் எடையை குறைத்து மெலிந்தார்.

இந்த நிலையில் அவர் ஒரு முன்னணி வார பத்திரிகைக்காக போட்டோ ‘ஷூட்’டில் கலந்து கொண்டார். அப்போது அவர் நீச்சல் உடையில் கவர்ச்சிகரமாக தோன்றினார்.

நீச்சல் உடை போட்டோக்களை தனது இன்ல்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதை பார்த்த பெரும்பாலான ரசிகர்கள் முகம் சுளித்தனர். அவரது முகம் பொலிவிழந்து விட்டதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.