இதில் கவுதம் கார்த்திக், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
சந்தோஷ் பி ஜெயகுமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். தருண் பாலாஜி ஒளிப்பதிவு செய்கிறார். பாலமுரளி பாலா இசை அமைக்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை - சுப்ரமணிய சுரேஷ்.
படம் பற்றி இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் கூறும் போது...
“ இது ஒரு அடல்ட் ஹாரர் காமெடி ஜேனரில் உருவாகும் படம். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாடுகளில் நடைபெறுகிறது. நாயகியாக நடிப்பதற்கு முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. படத்தின் சிங்கிள் டிராக் விரைவில் வெளியாகும்” என்றார்.