நிமிர் படத்தை தொடர்ந்து உதயநிதி அடுத்ததாக சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் ரிலீசாகவிருக்கும் நிலையில், உதயநிதி அடுத்ததாக மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.
முன்னதாக மிஷ்கின் சாந்தணுவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருந்தார். அப்படத்தைத் தயாரிக்க முன்வந்த லிப்ரா புரொடக்ஷன்ஸ் கடைசி நேரத்தில் பின் வாங்கியதால் அந்தப் படம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், அதே கதையில் உதயநிதி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அந்த படத்தை உதயநிதி நடிப்பதோடு தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவும் செய்கிறார்.
மிஷ்கின் - சாந்தணு கூட்டணியில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பி.சி.ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய இருக்கிறார். இந்த நிலையில், இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு ஆகஸ்டு இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது. #Udhayanidhi #Mysskin