சினிமா

ஹர ஹர மகாதேவகி தமிழ் சினிமாவிற்கு புதுமையான படம் : கௌதம் கார்த்திக்

கௌதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஹர ஹர மகாதேவகி’ படம் தமிழ் சினிமாவிற்கு புதுமையான படம் என்று கௌதம் கார்த்திக் கூறியுள்ளார்.

மாலை மலர்

இதில் பேசிய கௌதம் கார்த்திக், ‘இந்த படத்தின் கதை பலருக்கு சென்று மீண்டும் என்னை தேடி வந்துள்ளது. இயக்குனர் சந்தோஷ் என்னிடம் கதை சொல்ல வந்தபோது முதலில் எனக்கு இப்படத்தின் பாடல்களை தான் போட்டு காண்பித்தார். பாடல்களை நான் மிகவும் ரசித்து, சிரித்து கேட்டேன். பாடல்களை கேட்டதும் இந்த கதையில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டேன். அதன் பிறகு இயக்குனர் என்னிடம் ஹரஹர மகாதேவகியின் கதையை கூறினார். எனக்கு கதை மிகவும் பிடித்திருந்தது.

இந்த படத்தில் ஒவ்வொரு நாளும் நான் சந்தோஷமாக என்ஜாய் செய்து நடித்தேன். அனைவரும் கடினமாக உழைத்தோம். செட்டில் எல்லோரும் சிரித்துக்கொண்டே வேலைசெய்தது அருமையாக இருந்தது. என்னுடைய கடினமான காலகட்டத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என்னை அழைத்து இந்த படத்தை கொடுத்து உற்சாகத்தை, நம்பிக்கையும் தந்தார்.