நடிகை ஒருவர் குறிப்பிட்ட படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இருந்தாராம். நடிகை அழகில் மயங்கிய நடிகர்கள் பலர் நடிகைக்கு வலை விரித்தார்களாம். ஆனால், நடிகையோ யாரிடமும் சிக்காமல் தன் வேலையை மட்டும் பார்த்து வந்தாராம். இப்படி இருந்த நடிகை திடீரென தூர தேசத்தில் இருப்பவர் ஒருவரை காதலிக்கிறேன் என்றதும் வலை வீசிய நடிகர்களுக்கு எல்லாம் இதயம் நொறுங்கிவிட்டதாம்.
தன் காதலனுடன் ஊர் ஊராக சுற்றுப்பயணம் சென்ற நடிகை திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாராம். குழந்தை பிறந்ததும் என்ன நினைத்தாரோ தெரியவில்லை தன் பழைய காதலனை விட்டு விட்டு புதிய காதலனை தேடிக்கொண்டாராம். இப்போது அந்த காதலனுடன் தேசம் தேசமாக சுற்றி வருகிறாராம்.