சினிமா

பட அதிபர்கள் - திரையரங்கு உரிமையாளர்கள் சமரச பேச்சுவார்த்தை

சென்னையில் நடந்த திரையரங்கு உரிமையாளர்களின் கூட்டத்தில் பட அதிபர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. #TFPCStrike

மாலை மலர்

நாளை (16-ந்தேதி) முதல் சினிமா படப்பிடிப்புகளையும் நிறுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பட அதிபர்கள் போராட்டத்தால் இந்த மாதம் திரைக்கு வர தயாராக இருந்த 20-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகாமல் முடங்கி உள்ளன. தியேட்டர்களில் பழைய படங்களையே மீண்டும் திரையிட்டு வருகிறார்கள்.