இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இயக்குநர் சுசீந்திரன் அவரது டுவிட்டர் பக்கத்தில் கொலைகாரன் என்று தலைப்பு வைத்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
`கந்துவட்டி ஒரு பாவச்செயல்
கந்துவட்டி ஒரு பெருங்குற்றம்
கந்துவட்டி ஒரு மனிதநேயமற்ற செயல்
கந்துவட்டி கொலைகக்கு நிகரான செயல்
கந்துவட்டிக்காரன்
மனித உணர்வுகளையும்
மனித உயிர்களையும்
உறியும் ஒரு அட்டைப்பூச்சி
இவனை விட மோசமானவன்,
அயோக்கியன்,
யார் என்றால்
இவர்களை பாதுகாக்கும்
அரசியல்வாதிகளும் பதவியில் இருப்பவர்களும் தான்'