சினிமா

‘நான் ஆணையிட்டால்’ படத்தில் தமிழக அரசியல் பற்றி வசனம் பேசியது ஏன்?

‘நான் ஆணையிட்டால்’ படத்தில் தமிழக அரசியல் பற்றி வசனம் பேசியது ஏன் என்று படத்தின் இயக்குநர் தேஜா விளக்கம் அளித்திருக்கிறார்.

மாலை மலர்

இது தமிழில் ‘நான் ஆணையிட்டால்’ என்ற பெயரில் வெளிவருகிறது. ராணாவிடம் இது பற்றி கேட்ட போது...

“என் தாத்தா ராமாநாயுடு முதலில் தெலுங்கில் தயாரித்து, என்.டி.ராமாராவ் நடித்த ‘ராமடு பீமடு’ படம் தான் தமிழில் எம்.ஜி.ஆர். நடிப்பில் ‘எங்க வீட்டு பிள்ளை’யாக வந்தது. இந்த தலைப்பில் நான் நடிப்பது பெருமை.

நான் ஏன் அரசியலுக்கு வர்றேன். என்ன நடக்கிறது. நான் முதல்வர் ஆனேனா என்பதுதான் இதன் கதை. அரசியல் படம் என்பதால் காலத்துக்கு ஏற்றபடி இந்த வசனத்தை இயக்குனர் வைத்திருக்கிறார்.

பல மாநில அரசியல், நிஜ சம்பவங்கள் வேறு மாதிரி இருக்கும். முதல் முறையாக வேட்டி கட்டி தமிழக ஸ்டைலில் நடிச்சிருக்கேன். மற்றபடி எனக்கும் அரசியலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று கூறினார்.