சினிமா

நடிகை கடத்தல் வழக்கில் திலீப் ஜாமீன் மனு விசாரணை மீண்டும் தள்ளிவைப்பு

நடிகை கடத்தல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வரும் நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீதான விசாரணையை 22-ந் தேதிக்கு தள்ளிவைத்து கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாலை மலர்

நடிகை கொடுத்த புகாரின் பேரில் பிரபல ரவுடி பல்சர் சுனில், அந்த நடிகையின் கார் டிரைவர் மார்ட்டின், பல்சர் சுனிலின் கூட்டாளிகள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு அதிரடியாக நடிகர் திலீப் (வயது 48) கடந்த ஜூலை மாதம் 10-ந்தேதி கைது செய்யப்பட்டு ஆலுவா கிளை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இதைதொடர்ந்து நடிகர் திலீப் தனக்கு ஜாமீன் கேட்டு அங்கமாலி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் திலீப் தனது வக்கீல் ராமன் பிள்ளை மூலம் கடந்த 10-ந்தேதி கேரள ஐகோர்ட்டில் 2-வது முறையாக ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி 18-ந்தேதிக்கு (இன்று) விசாரணையை தள்ளிவைத்தார்.