சினிமா செய்திகள்

'The Boys Are Back'- வெங்கட் பிரபுவின் 'சென்னை 28 பார்ட் 3' ரெடி!

சென்னை 28 அணியினர் தங்களது அடுத்த இன்னிங்ஸை ஆடத் தயாராகிவிட்டனர்.

தமிழ் சினிமா ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாத ஒரு எவர்கிரீன் திரைப்படம் என்றால் அது இயக்குநர் வெங்கட் பிரபுவின் அறிமுகத் திரைப்படமான 'சென்னை 600028'.

சென்னை இளைஞர்களின் வாழ்வியலையும், தெருமுனை கிரிக்கெட்டையும் மையமாக வைத்து வெளியான இதன் முதல் பாகமும், கிராமத்துப் பின்னணியில் வெளியான இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில், ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் தரும் விதமாக இப்படத்தின் 'மூன்றாம் பாகம்' அதிகாரப்பூர்வமாகத் தயாராகி வருகிறது. 'தி பாய்ஸ் ஆர் பேக்' என்ற முழக்கத்துடன், சென்னை 28 அணியினர் தங்களது அடுத்த இன்னிங்ஸை ஆடத் தயாராகிவிட்டனர்.

இலங்கையில் முடிந்த திரைக்கதை:

இப்படத்தின் முதற்கட்டப் பணிகளான திரைக்கதை எழுதும் வேலைகள் அண்மையில் இலங்கையில் வைத்து முழுமையாக நிறைவடைந்தன.

இதைத் தொடர்ந்து, படத்தின் அடுத்தகட்டப் பணிகளுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு தற்போது தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு படப்பிடிப்பிற்கான தகுந்த இடங்களைத் தேர்வு செய்யும் 'லொகேஷன் ஸ்கவுட்டிங்' பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

இன்டர்நேஷனல் லெவலுக்கு மாறும் ஆட்டம்:

முதல் பாகத்தில் சென்னை மந்தவெளி ஏரியாவிலும், இரண்டாம் பாகத்தில் தேனி பக்கமுள்ள கிராமத்திலும் கிரிக்கெட் விளையாடி ரகளை செய்த 'ஷார்ஸ்' அணியினர், இந்த முறை தாய்லாந்து நாட்டுக்கு சர்வதேச அளவில் பயணம் செய்யவுள்ளனர்.

வழக்கமான வெங்கட் பிரபு பாணியில் ஏகப்பட்ட காமெடி, கலாட்டா, நட்பு மற்றும் புதிய சவால்களுடன், கிரிக்கெட் பின்னணியில் ஒரு பக்கா கமர்ஷியல் எண்டர்டெய்னராக இந்தத் திரைப்படம் உருவாகவுள்ளது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விபரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், சினிமா வட்டாரங்களிலும் ரசிகர்கள் மத்தியிலும் இந்த 'சென்னை 28 பாகம் 3' குறித்த எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.

SCROLL FOR NEXT