சினிமா செய்திகள்

வெங்கடேஷ்-கல்யாண் ராம்-அனில் ரவிபுடி இணையும் புதிய படம்: ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்!

"குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகும் இத்திரைப்படம் உருவாகிறது."

இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில், மூத்த நடிகர் வெங்கடேஷ் மற்றும் நந்தமுரி கல்யாண் ராம் ஆகியோர் இணைந்து நடிக்கும் புதிய மல்டிஸ்டாரர் (Multi-starrer) திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்த பிரம்மாண்ட கமர்ஷியல் திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தக் கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழுவினர் அனில் ரவிபுடியின் வழக்கமான நகைச்சுவை பாணியில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

பழம்பெரும் இயக்குநர் ஜந்தியாலாவின் 'ஆஹா நா பெல்லாண்டா' திரைப்படத்தின் புகழ்பெற்ற மணலில் கழுத்துவரை புதையும் காட்சியை மீளுருவாக்கம் செய்து, அதில் ஜி.வி.பிரகாஷ் குமார் இருப்பது போலவும், அவரிடம் அனில் ரவிபுடி படத்தின் திருவிழா மூடுக்கு ஏற்றவாறு ஹிட் பாடல்களைக் கேட்பது போலவும் இந்த ப்ரோமோ வீடியோ கலகலப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அனில் ரவிபுடி தனது முதல் படமான 'பட்டாஸ்' முதல் தொடர் வெற்றிகளைத் தந்து வருகிறார். வெங்கடேஷுடன் ஏற்கனவே இணைந்து பணியாற்றியுள்ள அவர், தற்போது கல்யாண் ராமையும் இதில் இணைத்திருப்பதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. மேலும், இப்படத்திற்குப் பிரபல பாடலாசிரியர் அனந்த ஸ்ரீராம் பாடல்களை எழுதவுள்ளார். 'ஷைன் ஸ்கிரீன்ஸ்' பேனரின் கீழ் சாஹு கரபதி இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார். சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீமதி அர்ச்சனா ஆகியோர் இப்படத்தை வழங்க, 'ஜீ ஸ்டுடியோஸ்' நிறுவனம் இணை தயாரிப்பாளராகக் களம் இறங்கியுள்ளது.

அனில் ரவிபுடியின் முந்தைய படங்களைப் போலவே, குடும்பங்கள் கொண்டாடும் கமர்ஷியல் படமாக உருவாகும் இத்திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT