இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஹாரர் திரில்லர் படமாக உருவாகி 2015-ம் ஆண்டு வெளியான டிமான்ட்டி காலனி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-ம் பாகத்தை படக்குழு வெளியிட்டது. இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது. உலகளவில் இப்படம் 80 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படக்குழு மூன்றாம் பாகத்தை இயக்க திட்டமிட்டது. படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து முடிந்த நிலையில் படப்பிடிப்பை ஜூலை மாதம் படக்குழு பூஜை விழாவுடன் தொடங்கியது. இந்த பாகத்தை பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் கோல்ட் மைன் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. அதில் கதாநாயகன் அருள்நிதி ஒரு நாற்காளியில் வில்லன் சிரிப்பில் உட்கார்ந்து கொண்டாருக்கிறார். இதனை ரசிகர்கள் வைராலாக்கி வருகின்றனர்.
வரும் மே மாதம் கோடை விடுமுறைக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Presenting the FIRST LOOK of the most anticipated horror, thriller sequel #DemonteColony3 - "The End is Too Far" ??Get ready for the seat-edge experience in theatres, this SUMMER 2026 ?@arulnithitamil @AjayGnanamuthu @Sudhans2017 @PassionStudios_ @DangalTV @RDCMediaPvtLtd… pic.twitter.com/TpVqQAq9Qr