பருத்திவீரன் படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் கார்த்தி. அதன்பின்னர் ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கார்த்தி, நடிகர் நானி குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், நானி எல்லாம் இடங்களிலும் நீங்கள் தான் இருக்கிறீர்கள். இது மிக அற்புதமாகவும், சந்தோஷமாவும் இருக்கிறது. தசரா படத்திற்கு நிறைய சக்தி இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் நானி தற்போது தசரா படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.