சினிமா செய்திகள்

மெய்யழகன் படத்தை தொடர்ந்து விக்ரமின் 64-வது படத்தை இயக்குகிறார் பிரேம்குமார்

விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

மாலை மலர்

வீர தீர் சூரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தை 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கவுள்ளார்.

விக்ரமின் 64-வது படமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் விக்ரமின் 64-வது படத்தை இயக்குகிறார் 'மெய்யழகன்' பட இயக்குநர் பிரேம்குமார். இப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

முன்னதாக விக்ரமின் 64-வது படத்தினை மடோன் அஸ்வின் இயக்குவதாக இருந்தது. இப்போது இந்த அறிவிப்பால் மடோன் அஸ்வின் இயக்கவுள்ள படம் கைவிடப்பட்டதாகவே கூறப்படுகிறது.